நாட்டாமை நாக்-அவுட்
நாட்டாமை:எல்லாரும் இங்க எதுக்கு கூடி இருக்கீங்கன்னு தெரியுமா? காத்தமுத்து:தெரியாது சாமி.ஊருல கரண்ட் இல்லை.அதான் வேக்காடா இருக்கேன்னு இங்க வந்தோம் சாமி.சட்டு புட்டுன்னு ஆரம்பீங்க.பொழுது போகணும். நாட்டாமை:நம்ம பொன்ராசு பெத்த சின்ராசு...நம்ம ராக்காயி பெத்த மூக்காயிய தூக்கிட்டு போய் மக்கள்:தூக்கிட்டு போய்... நாட்டாமை:தூக்கிட்டு போய் குளத்துல போட்டான். மக்கள்:அவ்வளவு தானா... வெள்ளைச்சாமி:அடச்சா...இதுக்கா கூட்டத்தை கூட்டுனீங்க...குளத்துல தானே போட்டான்.கெடுத்தா போட்டான்...இதுல என்ன தப்பு? நாட்டாமை:என்ரா சொல்லிபோட்ட நீயு.தூங்குறதுக்கு தரையும்,தூக்குறதுக்கு முறையும் முக்கியம் டா. காத்தமுத்து:அவனுக்கும் முறை இருக்கிறதாலதான் அவன் முறை மாமன் யா. நாட்டாமை:என்னது அவன் முறை மாமன் னா...(ஆகா முறை தெரியாம முறைசிட்டோமே)..அப்படியே முறை இருந்தாலும் பண்பாடு வேண்டாம்.இப்படிதான் போன வாரம்,வீட்டுல பங்காளிகளோட ஆட்டம் போட்டு இருக்கான்.வயசுக்கு வந்த தங்கச்சிய வீட்டுல வச்சுக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுறது. சின்ராசு:அதான் அவளை வெளிய அனுப்பிட்டு ஆட்டம் போடலாம்னு சொன்னேன்.பய