MA(DAI)YAN CALENDER
Dec 21,2012 - உலகத்தின் இறுதிநாள்.ஆம்,அவ்வாறு தான் மாயன் காலன்டர் கூறியதாக உலகம் சொல்கிறது.நெருப்பு குழம்பினை உள்ளடக்கி வைத்துருக்கும் எரிமலைகள் வெடித்து சிதறி,ஆச்சரியமும் ஆபத்தும் நிறைந்த ஆழ் கடல் சீற்றம் கொண்டு சுனாமியாக சுழன்றடித்து,தென்றலாய் வருடி செல்லும் காற்று பேய் பிடித்தார் போல் தானே,நீலம் என புயலாய் மாறி,இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் வீசி,பல கோடி உயிரினங்களை தாங்கும் பூமி மாதா பொறுமை இழந்து பயங்கர கோபத்துடன் தன வாயை பிளந்து நில நடுக்கத்தை உண்டாக்கி........................அட போங்கையா பொசகெட்ட பயலுகளா...சாப்டது செரிக்கலைன்னா வத்தலப்பாக்கு போடு இல்லை பீடா வாங்கி நல்லா மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு போவியாம்...அத விட்டிட்டு..எரிமலை வெடிக்குது,சுனாமி சுழட்டுதுன்னு வெறும் வாய்ல வெட்டிக்கதை பேசிகிட்டு.... எங்க ஊரு மாமியாருக வீட்டுல இருக்கிற கேஸ்-ஸா விடவாடா எரிமலை வெடிக்க போகுது.சுனாமி என்னடா சுண்டக்கா சுனாமி..நாங்கலாம் சுனாமிக்குள்ள ஸ்விம்மிங்க போட்டவங்க.சுனாமிக்கு வெளிய சுண்டலை தின்னுறவைங்க.டேய்,நாங்கலாம் சுனாமியோட பினாமி டா..எங்ககிட்டயேவா.... ஆமா,அது என்ன நீலம்,சிவப்பு