Posts

Showing posts from November, 2012

நோ மணி நோ அனி

மணி:நோ மணி நோ அனி..நோ அனி நோ மணி டா... அப்பு:என்னடா சம்பந்தமே இல்லாம என்னனமோ பாடுற.. மணி:சம்பந்தம் இருக்குடா..மணி னா நான்.அனி னா அனிதா.இப்போ புரிதா.மணி இல்லையேல் அணித இல்லை.அணித இல்லையேல் மணி இல்லை.எப்புடி...? அப்பு:அருமை(கொடுமை) மணி:ஹஹஹஹா..தேங்க்ஸ்.சரி,அவ வரலான்னு பாரு. அப்பு:என்ன அவசரம்,அவ வரத்தான் இன்னும் 15 நிமிஷம் இருக்குள்ள. மணி:இருக்குதான்.இருந்தாலும் மனசு பட படங்குது.நேத்து லவ் லட்டர் கொடுத்ததுல இருந்து கையும் ஒடலை,காலும் ஒடலை. அப்பு:எனக்கு கூட வண்டியும் ஓடலை,வாட்ச்சும் ஓடலை. மணி:ரெண்டுமே டப்பா தான்.ஓடுனா என்ன ஓடாட்டி என்ன.. அப்பு:ஒய்,என்ன நக்கலா...என் வண்டி,வாட்ச்  விட உன் கை,கால் பெருசா? மணி:ஆமா,கால் இல்லன்னா வண்டி ஓட்ட முடியாது.கை இல்லைன்னா வாட்ச் கட்ட முடியாது. அப்பு:ஒத்துகிறேன்.என்னைவிட நீ 10 மார்க் ஜாஸ்தியா வாங்குறேன்னு ஒத்துக்கிறேன். மணி:அது... அப்பு:ஆனா அதுக்குன்னு நீ வாங்குறதே 15 மார்க் தான் என்பதை மறந்துடாத. மணி:அஹ,சரிடா சரிடா..இப்போ அது ரொம்ப முக்கியமா.அவ வரளான்னு  பாருடான்னா  அதவிட்டுட்டு வெட்டிபேச்சு பேசிகிட்டு இருக்க. அப்பு:நான் வெட்