Posts

Showing posts from 2014

நட்பின் காதல்

நீ வானம்.. நான் மேகம்.. நம் அன்பே இங்கு மழையானது.. நம் உறவே நம் உலகானது.. எதிர்ப்புகள் நிறைந்த உலகமிது.. எதிர்பார்ப்புகள் இல்லா நெஞ்சம் ஏது.. இருந்தும் நம் புரிதல் நம்மை இணைத்தது.. பல மோதல் தாண்டியும் நம் நட்பு தழைக்குது.. நீ வானம்.. நான் மேகம்.. அன்ப.. மழையானது.. உறவு.. உலகானது.. அன்பை அடக்கி ஆள்வது உன்னிடமே. என்னை அடக்கி ஆள்வது உன் மனமே.. அன்பை விதைத்து சென்றது நீதானே.. அதில் நட்பை அறுவடை செய்வது நான்தானே.. நீ பூமி.. நான் வேர்.. நம் நட்பே இங்கு நிலையானது.. நம் உணர்வே என்றும் அழகானது.. உன் கண்களில் நான் என்னை கண்டதில்லை.. பெண்களில் உன்னை போல் யாரையும் கண்டதில்லை.. உன் பேச்சு என்னை என்றும் கவர்ந்ததில்லை.... ஆண்களில் உன்னை போல எவரும் என்னை கவர்ந்ததில்லை... நீ பூமி.. நான் வேர்.. நட்பே..நிலையானது.. உணர்வே.. அழகானது..

சென்னை - தாய் நகரம்

மதராசபட்டினம் என்ற மெட்ராஸ் என்கிற சென்னை.பல கோடி ஜனங்களின் இதய துடிப்பு.கனவை நிறைவேற்ற வாழ்பவர்க்கும்,கனவில் வாழ்பவர்க்கும் இடம் அளிக்கும் ஒரு வசந்த மாளிகை. உலகெங்கும் பல நாடுகளில்,நகரங்களில் வெடிகுண்டும்,தீவிரவாதமும் தலை தூக்கி தாண்டவம் ஆடும் காலகட்டத்திலும் எந்த தொல்லையும் இல்லாம இருக்கும் ஒரே நகரம் சென்னை. அதற்க்கு காரணம் ஒருவகையில் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கை குண்டுகள் கூட இருக்கலாம்.ஒருவர் மீதி ஒருவர் மாறி மாறி வீசும்போது கத்தி இன்றி,ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது என்ற முன்னோர் சொல்லே நினைவுக்கு வருகிறது(எதுக்கு சொன்னது எதுக்கு யூஸ் ஆகுது பாருங்க). வயசு வித்தியாசமின்றி அணைத்து வயதினரும் வருகை புரியும் மெரினா கடற்கரையில் கடலும் கடலை சார்ந்த நிலபரப்பில் எந்த பரபரப்பும் இன்றி அடிக்கிற வெயிலிலும் அசராம ரொமேன்ஸ் பண்ணும் இளசுகள் ஒரு பக்கம்,கடலையே கடவுளாய் என்னும் மீனவ மக்கள் ஒரு பக்கம்.மண்ணிலும்,கடல் நீரிலும் விழுந்து புரண்டு உடையில் கறை கொண்டாலும்,உள்ளத்தில் கறை கொள்ளா குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்.அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையும்,அவர்களின் சந்தோஷத்தை கண்ட

அம்மா (எ) உலகம்

தோழியே முதல் தோழியே  உந்தன் அன்புக்கில்லை வேலியே.. காதலே முதல் காதலே உன்னை மிஞ்ச யாரும் இல்லையே.. தடைகளை தகர்த்தென்னை தலைவன் ஆக்கினாய் தலையணை மடி கொண்டு சேயாய் மாற்றினாய்   அன்பென்னும் ஒற்றை சொல்லை உலகம் ஆக்கினாய் அந்த உலகமே நீயென உணரவைத்தாயே.. என் தாயே.. கருவாய் நானும் இருந்திடும்போது கனவுகள் நூறு கண்டாயே முழு உருவாய் உன்முன் பிறந்திடும்போது கனிவுடன் என்னை அணைத்தாயே உன் வியர்வை துளியில் என்னை நனைத்து உயர்வை உனக்கு தருவேனே  வரைமுறை நானும் மீறிடும்போது நெறிமுறை சொல்லி தந்தாயே  விதியுடன் நானும் மோதும்போது மதியால் வெல்ல வைத்தாயே அழகாய் நீயும் இல்லையெனினும் அம்மா என்றாலே அழகு தானே  தோழியே முதல் தோழியே  உந்தன் அன்புக்கில்லை வேலியே.. காதலே முதல் காதலே உன்னை மிஞ்ச யாரும் இல்லையே..