Posts

Showing posts from 2012

MA(DAI)YAN CALENDER

Dec 21,2012 - உலகத்தின் இறுதிநாள்.ஆம்,அவ்வாறு தான் மாயன் காலன்டர்  கூறியதாக உலகம் சொல்கிறது.நெருப்பு குழம்பினை உள்ளடக்கி வைத்துருக்கும் எரிமலைகள் வெடித்து சிதறி,ஆச்சரியமும் ஆபத்தும் நிறைந்த ஆழ் கடல் சீற்றம்  கொண்டு சுனாமியாக சுழன்றடித்து,தென்றலாய்  வருடி செல்லும் காற்று பேய் பிடித்தார் போல் தானே,நீலம் என புயலாய் மாறி,இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் வீசி,பல கோடி உயிரினங்களை தாங்கும் பூமி மாதா பொறுமை இழந்து பயங்கர கோபத்துடன் தன வாயை பிளந்து நில நடுக்கத்தை உண்டாக்கி........................அட போங்கையா பொசகெட்ட பயலுகளா...சாப்டது செரிக்கலைன்னா வத்தலப்பாக்கு போடு இல்லை பீடா வாங்கி நல்லா மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு போவியாம்...அத விட்டிட்டு..எரிமலை வெடிக்குது,சுனாமி சுழட்டுதுன்னு வெறும் வாய்ல வெட்டிக்கதை பேசிகிட்டு.... எங்க ஊரு மாமியாருக வீட்டுல இருக்கிற கேஸ்-ஸா விடவாடா எரிமலை வெடிக்க போகுது.சுனாமி என்னடா சுண்டக்கா சுனாமி..நாங்கலாம் சுனாமிக்குள்ள ஸ்விம்மிங்க போட்டவங்க.சுனாமிக்கு வெளிய சுண்டலை தின்னுறவைங்க.டேய்,நாங்கலாம் சுனாமியோட பினாமி டா..எங்ககிட்டயேவா.... ஆமா,அது என்ன நீலம்,சிவப்பு

விஜய் - V20

நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.- விவேகானந்தர் சொன்ன இந்த பழமொழிக்கு ஏற்றார்  போல ரஜினியின் அண்ணாமலை வசனம் பேசி,எம்.ஜி.ஆரின் நாளை நமதே பாடலையே தன படத்தின் தலைப்பாய் கொண்டு அவர்களை போலவே மக்கள் ரசிக்கும் கதாநாயகனாக,இளைய தளபதியாக உருவெடுத்துள்ள விஜய் அவர்கள் இன்றுடன் திரையுலகிற்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. வெள்ளித்திரைக்கு சம்பந்தம் இல்லாத பக்கத்துக்கு வீட்டு பையனின் முகத்தோடு வந்தவர் ஆரம்ப காலத்தில் சந்தித்தது அதிகபட்சம் அவமானம்.அதுதான் இன்று அவர் பிடித்திருக்கும் இடத்திற்காக அவுருக்கு கிடைத்த சன்மானம்.நடனம் ஆடதெரியாமல் ஏன் வந்தாய் என்ற அவமானத்துக்கு அவர் பெற்ற சன்மானம் இன்று அவரை போன்று நடனம் ஆட வேண்டும் என்று பலர் வியப்பதே. தந்தையின் உதவியால் திரை பிரவேசம் தொடங்கினாலும்,தன சுய உழைப்பால் "பூவே உனக்காக" முலம் மறுபிரவேசம் எடுத்தார்.எந்த மூஞ்சியை கிண்டல் செய்தார்களோ அதே முகத்தை கொண்டு காதலுக்கு மரியாதை,லவ் டுடே,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி,பிரியமானவளே,பிரெண்ட்ஸ் என காதலும்,குடும்பபாங்கான படங்களில் நடித்து அணைத்து தரப்பு மக்களிடமும் பெயர் பெற்றார். செவாலியே சி

நோ மணி நோ அனி

மணி:நோ மணி நோ அனி..நோ அனி நோ மணி டா... அப்பு:என்னடா சம்பந்தமே இல்லாம என்னனமோ பாடுற.. மணி:சம்பந்தம் இருக்குடா..மணி னா நான்.அனி னா அனிதா.இப்போ புரிதா.மணி இல்லையேல் அணித இல்லை.அணித இல்லையேல் மணி இல்லை.எப்புடி...? அப்பு:அருமை(கொடுமை) மணி:ஹஹஹஹா..தேங்க்ஸ்.சரி,அவ வரலான்னு பாரு. அப்பு:என்ன அவசரம்,அவ வரத்தான் இன்னும் 15 நிமிஷம் இருக்குள்ள. மணி:இருக்குதான்.இருந்தாலும் மனசு பட படங்குது.நேத்து லவ் லட்டர் கொடுத்ததுல இருந்து கையும் ஒடலை,காலும் ஒடலை. அப்பு:எனக்கு கூட வண்டியும் ஓடலை,வாட்ச்சும் ஓடலை. மணி:ரெண்டுமே டப்பா தான்.ஓடுனா என்ன ஓடாட்டி என்ன.. அப்பு:ஒய்,என்ன நக்கலா...என் வண்டி,வாட்ச்  விட உன் கை,கால் பெருசா? மணி:ஆமா,கால் இல்லன்னா வண்டி ஓட்ட முடியாது.கை இல்லைன்னா வாட்ச் கட்ட முடியாது. அப்பு:ஒத்துகிறேன்.என்னைவிட நீ 10 மார்க் ஜாஸ்தியா வாங்குறேன்னு ஒத்துக்கிறேன். மணி:அது... அப்பு:ஆனா அதுக்குன்னு நீ வாங்குறதே 15 மார்க் தான் என்பதை மறந்துடாத. மணி:அஹ,சரிடா சரிடா..இப்போ அது ரொம்ப முக்கியமா.அவ வரளான்னு  பாருடான்னா  அதவிட்டுட்டு வெட்டிபேச்சு பேசிகிட்டு இருக்க. அப்பு:நான் வெட்

தொ(ல்)லைப்பேசி

 கோகுல்:டேய் நீ கொடுத்த அட்ரஸ் சரிதானா? மோகன்:டேய்..அஹ.அஹ,,என்ன டவுட்டா..அட்ரஸ் குடுத்தது நான்டா. கோகுல்:அதான் கேட்கிறேன் சரியானு. மோகன்:ஒய்,என்ன நக்கலா? கோகுல்:இல்லடா தேவையில்லாம வேற எங்காச்சும் போய்ட  கூடாதுல.அதான் கேட்டேன்.சரி,அங்க போயட்டபிறகு கால் பண்றேன்.பை. மோகன்:மச்சான்,அவகிட்ட லவ் சொன்ன பிறகு ட்ரீட் டா. கோகுல்:லவ் சொன்னதுக்கேவா? மோகன்:அட,நமக்கெல்லாம் இதுவே ஜாஸ்திடா.சரி,முடிச்சிட்டு கால் பண்ணு.ஆல் தி பெஸ்ட்.பை. (செல்லும் வழியில் ஒரு போன் கால்) கோகுல்:ஹலோ.. ப்ரியா:ஹலோ..என்ன சார்.நேத்து இவனிங் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை. கோகுல்:ஹே இல்லப்பா.நேத்து நம்ம மோகன் கீதா அட்ரஸ் வாங்குறதுக்காக போனான்.அதான் அவனை பார்க்க போனேனா.அப்படியே மறந்துட்டேன்.சாரி. ப்ரியா:ஹ்ம்ம்..ஹ்ம்ம்..இருக்கட்டும்.இருக்கட்டும்.இப்பவே எங்களை மறந்துட்ட.லவ் ஓகே ஆச்சுனா கேக்கவா வேணும். கோகுல்:ஹே என்னப்பா இப்படி சொல்லிட்ட.நான் போய் உன்ன மறப்பேனா? ப்ரியா:அதான் நேத்து மறந்துட்டியே. கோகுல்:அட,நேத்து என்ன சொன்னேன்? ப்ரியா:இவனிங் வரேன்னு சொன்ன. கோகுல்:அஹ,இவனிங் வரேன்னு சொன்னேன்.ஆனா என்னைக

நானா நீயா

அனைவருக்கும் வணக்கம்.ஊரில் உள்ள பிரச்சனைகளை,மக்கள் கண்ணோட்டத்தில்,அலசி,நனைத்து,பிழிந்து,துவைத்து இஸ்திரி போடும் இந்நிகழ்ச்சி "நானா நீயா".நான் உங்கள் குல்பிநாத்.இன்று நாம் அவ்வாறு அலச போகும் பிரச்சனை "சமுதாயத்தில் மரியாதை கெட்டவர் திருடனா அல்லது பிச்சைக்காரனா". ரெண்டு தரப்புலயும் பார்த்தீங்கன்னா,போக்கிடமின்றி போஜனத்துக்கு யாசகம் கேட்டு வயது வரம்பின்றி,ஜாதி மத பேதமின்றி,சந்து பொந்து சச்சரவு இன்றி எங்கேயும்,எப்போதும் அயராமல்,அசராமல் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.இங்க பொழுதோடு விளையாடி,புறம்போக்கோடு உரையாடி,மக்களிடம் களவாடி காலத்தை ஓட்டும் கள்வர்கள் இவர்கள்.நீங்க சொல்லுங்க... கொக்கி:நான்தான் கொக்கி குமார்.மீனம்பாக்கத்துல இருந்து மீனாட்சி காலேஜ் வரைக்கும் பல ஏரியால திருடுறேன் சார்.நேரம் காலம் பார்க்காம,பையையும்,கையையும் நம்பி பொழப்பு நடத்துறோம். பிச்சைமுத்து:நாங்க மட்டும் லேப்டாப்,ஐ-பேட் வச்சுகிட்டா பிச்சை எடுக்கிறோம். நாங்களும் வெத்துப்பை ,வெறுங்கையுமா தான் பிச்சை எடுக்குறோம். கேடிமணி:அட,உங்கள மாதிரி உழைக்க வக்கில்லாம,ரோடு ஓரமா உக்காந்து பிச்சை எடுக்கிறவங்கள நாங்

பார்த்தேன் தவித்தேன்

என் உச்சி மண்டைல சுர்ருங்குது ஐஸ் குச்சி வெயில்ல உருகிறது   என் மொபைல் சைலன்ட்ல அலறுகிறது எடுத்து பார்த்தா 32  மிஸ்டு கால் எகிறுகிறது உறுகுற போதும் அந்த ஐஸ் குச்சிய உச்சிகொட்டி,சப்புகொட்டி ருசி பார்க்கும்போது சில்லென்று ஒரு Air     கும்மென்று ஒரு பிகரு வெட்ட வெளியிலே வெளுக்கிற வெயிலிலே வெள்ளாவில வச்சி வளர்த்தா மாதிரி ஒரு மாதுரி அளவிலே அவள் ஹன்சிகா உயரத்திலே அவள் தன்ஷிகா சிரிக்கையில் கூல் ஜோதிகா முறைக்கையிலே தூள் ஸ்வர்ணாக்கா என் headlight   கண்களில் அவள் highlight அழகுகள் அரங்கேற அந்த sunlight  ஒளியிலே அவள் magnite   விழிகள் விளையாட அடகுக்கடை பொட்டியில் அமுக்குன வட்டியில் வாங்குன வண்டியில் ஏறி அவள் அருகில் சென்று ஓரக்கண்ணில் அவள் காந்தகண்ணை கண்டேன். அவளும் நோக்கினால் அருகில் அவள் அண்ணன்னும் நோக்கினால் ஓடிவந்து ஓங்கி அடித்த ஒன்ரா டன் அடியால் என் ஒன்ரகன் பார்வை பறிபோக ஐயகோ னு நான் அலறியபடி அவள் கை பிடிக்க என்னங்கோ னு அவள் கை பிடித்த கணவனை அழைக்க  மனம் முடித்த மணாளனும்,மதம் பிடித்த மாங்கா மடையர்களும் என் விலா எலும்பில் விழா எடுத்து கொண்டாட அவர்க

(க்)ராக் ஜாக்

 நடு கடலிலே கப்பல இறங்கி தள்.. ராக்:ஹலோ..இட்ஸ் ராக்குமுத்து ஸ்பீக்கிங்.நீங்க யாரு? ஜாக்:ஹஹஹஹஹஹா....நான் யாருன்னு தெரிதா? ராக்:இப்படி ஒரு கேவலமான சிரிப்பா இதுக்கு முன்னாடி கேட்டதில்லை.ஒரு வேலை..ஹ்ம்ம்..   டேய்,பத்தாவது படிக்கும்போது பக்கத்துக்கு வீட்டு பவுனோட கவுன திருடி செருப்படி வாங்குன செந்தில் தானே. ஜாக்:நான் பத்தாவது படிச்சதில்லை. ராக்:இல்லையா..ஹ்ம்ம்.அஹ,அப்போ அஞ்சாவது படிக்கும்போது ஒரு ஐஸுக்கு சண்டைபோட்டு ரெண்டு அய்சும் தொலைச்ச அய்யாசாமி தானே. ஜாக்:ஹஹஹா...நான் அஞ்சாவதும் படிச்சதில்லை. ராக்:அதுவும் இல்லையா..அப்போ ரெண்டாவதுல ரெட்டைஜடை ரேணுகாவ கண்ணடிச்சு கன்னத்துல அடி வாங்குன கண்ணன் தானே. ஜாக்:ஹிஹிஹி...நான் ரெண்டாவதும் படிக்கலை. ராக்:அப்போ என்னதாண்ட படிச்சிருக்க? ஜாக்:நான் படிச்சதே இல்லை.ஏன்னா பள்ளிக்கூடம் போனதே இல்லை. ராக்:இத முதலயே  சொல்லவேண்டிதான ஜாக்:இத முதலயே கேட்கவேண்டிதானே ராக்:யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிகிட்டு இருக்க ஜாக்:நீகூட தான் யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்க.ஹஹஹஹா...நாந்தாண்ட உன்னால கைது செய

கை கொடுக்கும் கை

சாம்:இன்னைக்கு வெயில் ஜாஸ்திடா அசோக்:வேலையும் ஜாஸ்திடா..ஒரு ப்ராஜெக்ட முடிக்க எத்தன மாசம் முக்க வேண்டிருக்கு. சாம்:எத்தன மாசம் முக்குன? அசோக்:அது..அதுலாம் பார்த்தா வேலை பார்க்க முடியுமா? சாம்:அப்புறம் ஏன் இந்த வீண் விரக்தி? அசோக்:சும்மாத்தான்...சரி,சரி....யாருப்பா அங்க? ஜீவா:சார்..என்ன வேணும் சார்? அசோக்:உனக்கு என்ன வேணும்டா? சாம்:எனக்கு ரெண்டு பரோட்டா.. அசோக்:எனக்கு ஒரு மீல்ஸ். ஜீவா:ரைட் சார். சாம்:நாளைக்கு சனிக்கிழமை.அரை நாள் தான்.ஆபிஸ் முடிஞ்ச கையோட எங்காச்சும் வெளிய போலாமா? அசோக்:எங்கடா போலாம்? சாம்:ஏதாச்சும் படத்துக்கு? அசோக்:ஹ்ம்ம்...நம்ம ஆக்ஸன் ஸ்டார் அம்ஜத் கான் நடிச்ச " லூஸ் பாண்ட்௦௦ 007" பார்க்கலாமா? சாம்:அதுக்கு புல் டே ஆப்பிஸ்லையே இருக்கலாம். அசோக்:அப்போ ரோமென்ஸ் ஸ்டார் ரோஹித் நடிச்ச "நைனாவும் மைனாவும்" பார்க்கலாமா? சாம்:அவன் படத்துக்கு ஒ.சி ல டிக்கெட் கொடுத்தாலும் போகமாட்டேண்டா. அசோக்:நடிப்பை புழியுறேன்னு பேருல நடிகைய போட்டு புழிவான். சாம்:அப்போ பீச்சுக்கு போலாமா? அசோக்:நாம

நாட்டாமை நாக்-அவுட்

நாட்டாமை:எல்லாரும் இங்க எதுக்கு கூடி இருக்கீங்கன்னு தெரியுமா? காத்தமுத்து:தெரியாது சாமி.ஊருல கரண்ட் இல்லை.அதான் வேக்காடா இருக்கேன்னு இங்க வந்தோம் சாமி.சட்டு புட்டுன்னு ஆரம்பீங்க.பொழுது போகணும். நாட்டாமை:நம்ம பொன்ராசு பெத்த சின்ராசு...நம்ம ராக்காயி பெத்த மூக்காயிய தூக்கிட்டு போய் மக்கள்:தூக்கிட்டு போய்... நாட்டாமை:தூக்கிட்டு போய் குளத்துல போட்டான். மக்கள்:அவ்வளவு தானா... வெள்ளைச்சாமி:அடச்சா...இதுக்கா கூட்டத்தை கூட்டுனீங்க...குளத்துல தானே போட்டான்.கெடுத்தா போட்டான்...இதுல என்ன தப்பு? நாட்டாமை:என்ரா சொல்லிபோட்ட நீயு.தூங்குறதுக்கு தரையும்,தூக்குறதுக்கு முறையும் முக்கியம் டா. காத்தமுத்து:அவனுக்கும் முறை இருக்கிறதாலதான் அவன் முறை மாமன் யா. நாட்டாமை:என்னது அவன் முறை மாமன் னா...(ஆகா முறை தெரியாம முறைசிட்டோமே)..அப்படியே முறை இருந்தாலும் பண்பாடு வேண்டாம்.இப்படிதான் போன வாரம்,வீட்டுல பங்காளிகளோட ஆட்டம் போட்டு இருக்கான்.வயசுக்கு வந்த தங்கச்சிய வீட்டுல வச்சுக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுறது. சின்ராசு:அதான் அவளை வெளிய அனுப்பிட்டு ஆட்டம் போடலாம்னு சொன்னேன்.பய

கவுன்சிலர் கபாலி

மணி:ஹே நவுரு நவுரு...நம்ம அண்ணாத்த கண்ணம்மா பேட்டை கபாலி வந்துருக்காரு பாரு. கபாலி:எல்லாருக்கும் வணக்கம். ஜான்:வணக்கம் அண்ணாத்த,உங்களை எங்கேயோ பார்த்துருக்கேன்.ஆனா யாருன்னு தான் சரியா தெரில. மணி:அடேய் கயிதை,அண்ணாத்தைய தெரில.இவுருதான் நம்ம ஏரியா கவுன்சிலர். குப்பாத்தா:அவுரா இவுரு.கடசியா கவுன்சிலர் ஆனப்ப பார்த்தது.அதான் மறந்து போச்சு. ஜான்:அது ஆச்சு பல மாசம்.என்ன அண்ணாத்த,அப்பப்போ இந்த பக்கம் வந்தாதான்னே ஞாபகம் இருக்கும். கபாலி:கொஞ்சம் தொகுதி பணி ஜாஸ்தி ஆகிடுச்சு.அதான் வரமுடில. மணி:எந்த தொகுதி பணி அண்ணாத்த? கபாலி:அட,நம்ம தொகுதிதான் பா,கண்ணம்மாபேட்டை. மணி:அப்படியா அண்ணாத்த,ஆமா தொகுதி பணினா என்ன அண்ணாத்த? கபாலி:அதுவா,அதான்யா இந்த தொகுதில இருக்கிற பிரச்சனைகளை கேட்டு சரி பண்றதுப்பா. ரமணி:அப்படியா.ஆனா நீதான் அப்படி எதுவுமே பண்ணலியே  தலைவரே. கபாலி:என்ன இப்படி சொல்லிடீங்க.இந்த தொகுதிக்காக இரவு பகல் பாராது எத்தனை உதவி செஞ்சுருக்கேன்.என்ன மறந்துடீங்களா.ஒன்னுகூடவா ஞாபகம் இல்லை. ஜான்:என்ன தலைவரே கிண்டல் பண்றீங்க.உங்களையே ஞாபகம் இல்லைன்னு சொல்றோம்